மண்ணில் விளைந்த முத்துக்களே

மரணம் ஏதடா

கண்ணில் விழுந்த இரத்தத்திலே

கவிதை பாடடா

இதயம் முழுதும் அழுவதால்

விழியில் நீரடா

விழையும் பயிர்கள் அழிவதால்

மனதில் நோயடா

விந்தைதானடா

மண்ணில் விளைந்த முத்துக்களே

மரணம் ஏதடா

கண்ணில் விழுந்த இரத்தத்திலே

கவிதை பாடடா

சந்தனப் பேழையிலே

உறங்கிடும் தோழனே

எனக்குன் துணிவைத் தா

எனக்குன் புடவை தா

அண்ணன் தம்பி ஆகி விட்டோம்

அப்பு ஆச்சி ஆசிப் பட்டோம்

ஆயுதங்கள் ஏந்தி விட்டோம்

ஆனவரை பார்த்திடுவோம்

காலம் வரட்டும் காத்திருப்போம்

காதில் சங்கொலி கேட்டிருப்போம்

போ.. வந்தால் போர் தொடுப்போம்

சாதல் என்றால் பேர் கொடுப்போம்

இனி நாளை நாம்தான் வா

மண்ணில் விளைந்த முத்துக்களே

மரணம் ஏதடா

கண்ணில் விழுந்த இரத்தத்திலே

கவிதை பாடடா

சிறைகளில் இருந்ததும்

தலைகளை இழந்ததும்

விடுதலை அடையவே

நினைத்தது நடக்கவே

உங்கள் அடிச்சுவட்டிலே

எங்கள் வழி இருக்குது

எதிரிகள் தெரியுது

எண்ணங்கள் புரியுது

தீரம் என்றென்றும் ஒய்வதில்லை

வெற்றி என்பது தூரமில்லை

நாளை என்பது நம் கையிலே

நாடு என்றென்றும் நம் கண்ணிலே

புது வாழவே காண்போம் வா

மண்ணில் விளைந்த முத்துக்களே

மரணம் ஏதடா

கண்ணில் விழுந்த இரத்தத்திலே

கவிதை பாடடா

இதயம் முழுதும் அழுவதால்

விழியில் நீரடா

விழையும் பயிர்கள் அழிவதால்

மனதில் நோயடா

விந்தைதானடா

#ltte mp3 songs #ltte songs #eelam songs #maaveerar songs #karthigai 27 #thayaka kanavudan #prabaharan songs #santhan songs #thenisai chellappa #maaveerar #தமிழீழ பாடல்கள் #தாயகப் பாடல்கள் #மாவீரர் பாடல்கள் #தமிழீழ எழுச்சிப் பாடல்கள் mp3 download #விடுதலை புலிகள் பாடல் mp3 download #கரும்புலிகள் பாடல்கள் mp3 #பிரபாகரன் பாடல் mp3 download #மாவீரர் பாடல்கள் mp3