அழகான அந்தப் பனை மரம் | Eelam Song Lyrics


 அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா நீ என் அன்னை

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

அன்று முற்றத்தில் அழித்து அழித்து நான்

ஆனா எழுதிய மண்ணல்லவா

இன்று நான் பாடும் பாட்டும் என் தாய்மண் என்னுள்

இசைக்கின்ற பண்ணல்லவா

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

எங்கு வாழ்ந்தாலும் எனது தமிழ் நெஞ்சம்

இயங்கும் என் தாயின் எண்ணத்திலே

அங்கு தமிழினம் துடிக்கும் பொழுதெல்லாம்

ஆறு பாயுமென் கன்னத்திலே

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

எதிரி எங்கள் தாய் மண்ணை அழித்ததாய்

இரவு பகல் நூறு கதை கட்டுவான்

அதிரும் புலிகளின் குண்டு வெடியோசை

அறிந்து தமிழ்பிள்ளை கை தட்டுவான்

அழகான அந்த பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

பகைவர் பாயலாம் உடல்கள் சாயலாம்

எனினும் தமிழ் ஈழம் பணியாது

அகமும் புறமுமாய் உயிரில் கலந்த என்

அன்னை மண் பாசம் தணியாது

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா நீ என் அன்னை

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்

அடிக்கடி நினைவில் வரும்